காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தந்தை, மகள்

5 டன் எடைகொண்ட லோரியுடன் கார் ஒன்று எதிரும் புதிருமாக மோதிக்கொண்டதில் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தந்தையையும், மகளையும் ​தீயணைப்பு மீட்புப்படையின​ர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பேண்டிங், புக்கிட் சாங்காங், லங்காட் முர்னி- யில் நிகழ்ந்தது. 30 வயது மதிக்கத்தக்க நபரையும், அவரின் பத்து வயது மகளையும் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி ​தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

சிகிச்சைக்காக அவ்விருவரும் சுகாதார இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த மையம் கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்