காரில் பிள்ளையை மறந்துவிட்டு சென்ற பெற்றோர்!

ஷா ஆலாம், மார்ச் 19 –

சிலாங்கூர் ஷா அலாமில், கொளுத்தும் வெயிலில் வாகனத்தினுள் இருந்த குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோரின் செயல் சமூக ஊடகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

காரின் பின்புறமுள்ள இருக்கையில், 3 வயதுடைய சம்பந்தப்பட்ட குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை உணராத அத்தம்பதியர், வீட்டினுள் சென்றுள்ளனர்.

சுமார் 15 நிமிடங்கள் வரை, அந்த பிள்ளை வாகனத்தினுள் இருந்த வேளையில், நல்வினைப் பயனாக வாகனத்தின் கண்ணாடி திறந்த நிலையில் இருந்திருந்தது.

பின்னர், வீட்டிற்கு சென்றதும் தங்களது பிள்ளை உடன் இல்லாததை உணர்ந்துள்ளனர். பதற்றத்திற்குள்ளான அவ்விருவரும் அதன் பிறகே வாகனத்திற்கு சென்று, அவர்களது பிள்ளையை மீட்டனர்.

காரின் கண்ணாடி திறந்திருந்ததால் தன் பிள்ளைக்கு ஏதும் ஆகவில்லை என்றும் எதிர்பாராத அச்சம்பவம் தனக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளதாக கூறி, அவ்வாடவர் டிக்டோக்கில் பதிவேற்றம் செய்திருந்த 41 நிமிட காணொளியில் தெரிவித்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்