லோரோங் செம்பக்கா பத்து 18 ½, கம்போங் சுங்கை திராமில் விளையாடிக் கொண்டிருந்த போது கால்வாயில் தவறி விழுந்த ஐந்து வயதுச் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.
இத்துயரச் சம்பவம் இங்குள்ள லோரோங் செம்பக்கா பத்து 18 ½, கம்போங் சுங்கை திராமில் நேற்றிரவு நிகழ்ந்தது.
அச்சிறுவனின் உடல் சம்பவ இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செம்பனை மரம் அருகே மீட்புக் குழுவிரால் இரவு 10.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு – மீட்புப் படையின் மூத்த உதவித் தலைவர் முகமட் ஃபைஸ் ரம்லி கூறினார்.
அச்சிறுவன் கண்டெடுக்கப்பட்ட போது அச்சிறுவன் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.