சிலாங்கூர் மாநிலத்தில் முக்கிய நகரமாக விளங்கும் கிள்ளான், ஓர் அரச நகராக மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah இனறு ஜனவரி 5 ஆம் தேதி பிரகடனப்படுத்தினார்.
அதேவேளையில் காப்பார், கோலக்கிள்ளான் ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பெருமை மிக்க கிள்ளான், ஊராட்சி மன்றம், நகராண்மைக்கழகம் ஆகிய அந்தஸ்திலிருந்து விடுபட்டு கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியிலிருந்து மாநகர் அந்தஸ்தைப் பெறுவதாக சுல்தான் அறிவித்தார்.
Majlis Perbandaran Klang என்ற அந்தஸ்திலிருந்து Majlis Bandaraya Diraja Klang என்று / கிள்ளான் இனி அழைக்கப்படும் அதேவேளையில் கிள்ளானின் முதல், டத்தோ பண்டராகவும், மேயராகவும் ஒரு பெண்மணியான Datin Paduka Noraini Roslan நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தின் தலைப்பட்டணமாக ஒரு காலத்தில் விளங்கிய கிள்ளானில் மக்களுக்கான தனது சேவையளிப்பை சிறந்த முறையில் வழங்க வேண்டும் என்று Majlis Bandaraya Diraja Klang பொறுப்பாளர்களை சிலாங்கூர் சுல்தான் கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூரில் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் என மக்கள் அடர்ந்து நிறைந்த நகரங்களின் கிள்ளானும் ஒன்றாகும். மலேசியாவின் துரித வளர்ச்சியில் கோலாலம்பூருக்கு அடுத்து, பாரம்பரியங்கள் நிலைநாட்டப்படும் பழமை வாய்ந்த ஒரு நகரமாக கிள்ளான் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.