சிலாங்கூர் மாநிலத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான கிள்ளானில் குற்றச்செயல்கள் அதிகரிப்பானது, கொலம்பியா நாட்டைப் போல் தோற்றம் கொண்டுள்ளது என்று சில தரப்பினர் கூறி வரும் குற்றச்சாட்டை போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain மறுத்துள்ளார்.
கிள்ளான் எப்பொழுதுமே அரச நகரமாகும். அமைதியும், தூய்மையும் நிறைந்த ஊராகும் என்று ஐஜிபி வர்ணித்தார். கடந்த வாரம் திங்கட்கிழமை, கிள்ளான் ஹோக்கியான் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற குற்றச்செயல்கள் துடைத்தொழிப்பு மீதான கலந்துரையாடலில் கிள்ளான் நகர், கொலம்பியா நாட்டுடன் ஒப்பிடப்பட்டு இருப்பதை Razarudin Husain சாடினார்.
கிள்ளான் நகர், கொலம்பியாவுடன் ஒப்பிடப்படும் பட்சத்தில் அந்த நகரில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுவது தொடர்பில் இன்று கிள்ளான், பண்டமாரானுக்கு வருகைப்புரிந்த IGP மேற்கண்ட விளக்கத்தை தந்துள்ளார்.
கிள்ளானில் குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதற்கும், கிள்ளான் நகர் மீது சிலர் கொண்டிருக்கும் எதிர்மறையான எண்ணத்திலிருந்து விடுபடுவதற்கும் பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி. சுட்டிக்காட்டினார்.