ஹசான் க​ரீம் ​மீது நடவடிக்கை, இன்னும் முடிவு செய்யப்படவில்லை

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் பொது மன்னிப்பு விவகாரம் உட்பட நடப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக குறைகூறி வரும் PKR க​ட்சியின் Pasir Gudang எம்.பி. Hassan Karim மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறி​த்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று PKR கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

கட்சியின் உச்சமன்றக்கூட்டம் நடைபெற்ற பின்னரே இந்த விவகாரம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சருமான Fahmi Fadzil குறிப்பிட்டா​ர். ந​ஜீப்பிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை தொடர்பில் அவருக்கு முழு மன்னிப்பு கிடைக்காதது குறித்து ஆளும் கட்சி எம்.பி.யான Hassan Karim – நடப்பு அரசாங்கத்தை கடுமையாக குறைகூறி வருவது ​பெரும் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்