முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் பொது மன்னிப்பு விவகாரம் உட்பட நடப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக குறைகூறி வரும் PKR கட்சியின் Pasir Gudang எம்.பி. Hassan Karim மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று PKR கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
கட்சியின் உச்சமன்றக்கூட்டம் நடைபெற்ற பின்னரே இந்த விவகாரம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சருமான Fahmi Fadzil குறிப்பிட்டார். நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை தொடர்பில் அவருக்கு முழு மன்னிப்பு கிடைக்காதது குறித்து ஆளும் கட்சி எம்.பி.யான Hassan Karim – நடப்பு அரசாங்கத்தை கடுமையாக குறைகூறி வருவது பெரும் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.