கூடுதலாக 6 மின்சார ரயில் சேவைகள்

வரும் சீனப்பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மலாயன் ரயில்வே பெர்ஹாட், கூடுதலாக ஆறு மின்சார ரயில் சேவைகளை இயக்கவிருக்கிறது.

ETS எனப்படும் மின்சார ரயில் சேவையில் கூடுதலாக 6 சேவைகள் கோலாலம்பூர் சென்ரல் – ஈப்போ மற்றும் கோலாலம்பூர் சென்ரல் – பாடாங் பெசாரை உள்ளடக்கியிருக்கும்.
கோலாலம்பூரிலிருந்து ஈப்போவிற்கு கூடுதலாக நான்கு சேவைகளும், கோலாலம்பூரிலிருந்து பாடாங் பெசாருக்கு கூடுதலாக 2 ரயில் சேவைகளும் விடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி கூடுதல் ரயில் சேவை அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்