கெந்திங் சூதாட்ட மையம் மூடப்படுகிறது

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 –

மலேசியாவில் சூதாட்டம் மற்றும் இதர கேளிக்கை பந்தய விளையாட்டுளின் சொர்க்கப்பூரி என்று வர்ணிக்கப்படும் கெந்திங் மலேசியா பெர்ஹாட், தனது பிரதான மூன்று சூதாட்ட மையங்களில் இரண்டு மையங்களை இன்று அதிகாரப்பூர்வமாக மூடுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட முதன்மை சூதாட்ட மையங்களை மூடுவதற்கு கெந்திங் மலேசியா பெர்ஹாட் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மலேசியா மட்டுமின்றி சிங்கப்பூர் சூதாட்டப் பிரியர்களை கவலையிலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.

பணக்காரர்கள் மற்றும் உல்லாச விரும்பிகளின் சூதாட்ட சொகுசு தளங்களான கெசினோ 1 சிர்குஸ் ப்லெஸ் மற்றும் Casino 2 ஹோலிவூட் ஆகிய இரண்டு பிரதான சூதாட்ட மையங்கள் இன்று பிப்ரவரி 28 ஆம் தேதியுடன் மூடப்படுவதாக கெந்திங் மலேசியா பெர்ஹாட் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் சூதாட்ட விரும்புகளின் தேர்வுக்குரிய இந்த இரண்டு பிரதான சூதாட்ட மையங்கள் மூடப்படுவதற்கான காரணத்தை கெந்திங் மலேசியா பெர்ஹாட் வெளியிடவில்லை.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்