பென்த்தோங், ஏப்ரல் 15-
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையின் 15.1 ஆவது கிலோமீட்டரில் உள்ள மலைப்பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக, பென்த்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் சைஹாம் மோஹட் கஹார் உறுதிபடுத்தினார்.
நேற்று மாலை மணி 3.40 அளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து பகாங் போலீஸ் தடயவியல் பிரிவுடன் தனது தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சோதனைக்காக சென்றிருந்தனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் காணப்படாத நிலையில், சவப் பரிசோதனைக்காக அவரின் உடல் தெங்க்கு அம்ப்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சைஹாம் மோஹட் தெரிவித்தார்.
சவப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் கிடைக்க பெறும்வரையில் இதுவொரு திடீர் மரணமே என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதாக சைஹாம் மோஹட் கூறினார்.
பாதிக்கப்பட்ட நபரை குறித்த தகவலறிந்தவர்கள் அருகாமையிலுள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்கும்படியும் சைஹாம் மோஹட் கேட்டுக்கொண்டார்.