ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாய் என்ற இடத்தில் கைப்பேசி கடை ஒன்றில் நுழைந்து விலை உயர்ந்த கைப்பேசிகளை களவாடியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று திங்கிட்கிழமை அதிகாலை 4.38 மணியளவில் நடந்ததாக கூறப்படும் இந்த களவாடல் தொடர்பான வீடியோ காணொளி ஒன்று, தேவி ஷாரிஎன்பவரின் முகநூல் கணக்கிலிருந்து சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த கைப்பேசி களவாடல் தொடர்பில் 35 வயது நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகம்மட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.