கொள்ளையிட்ட நபரை போலீசார் கைது

செர்டாங், மார்ச் 14 –

கம்பூங் ஆயேர், ஜாலான் துகு வில் ஒரு எரிவாயு நிலையத்திற்கு முன், ஒரு நபரை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எரிவாயு நிலையம் உட்பட மின்சார கடை உடைப்பு தொடர்புடைய இரண்டு வழக்குகளை காவல்துறையினர் வெற்றிகரமாக தீர்த்துள்ளனர்.

நேற்று மாலை 3:30 மணியளவில் கூலித் தொழிலாளியாக பணிப்புரியும் 28 வயதுடைய சந்தேகிக்கும் ஆடவர் மாநில தலைமையக குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, ஜாலான் துவாரான் பாத்து 1 -யில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்று சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நுழைந்து உடைக்கப்பட்டதாக புகார் கிடைக்கபெற்றிருப்பதாக சபா சி.ய்.டி யின் மூத்த தலைவர் ஏ.சி.பி அஸ்மி அப்துல் ராஹிம் கூறினார்.

சந்தேகிக்கும் நபரிடமிருந்து பெட்டிகள், கைத்தொலைபேசிகள், சிகரெட்டுகள், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அஸ்மி அப்துல் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்