கோத்தா கினாபாலு, மார்ச் 14 –
கோத்தா கினாபாலுவில் போலி துப்பாக்கிகளை இரகசியமாக வைத்திருந்து விற்பனை செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் பாப்பார் ரில் உள்ள ஒரு வளாகத்தில் சந்தேகிக்கும் 37 வயதுடைய அப்பெண் சபா காவல்படைத் தலைமையகத்தின் 9டி குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இச்சோதனையின்போது பல வகையான 12 போலி துப்பாக்கிகளை அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றியதாக சபா, குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் ஏ.சி.பி அஸ்மி அப்துல் ராஹிம் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு வகையான மற்றும் வண்ணங்களில் தோட்டாக்கள் அடங்கிய ஏழு போத்தல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அஸ்மி அப்துல் ராஹிம் இன்று கூறினார்.