கோத்தா வாரிசான் நகைக்கடை கொள்ளை சந்தேகப்பேர்வழிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை

சிப்பாங், கோத்தா வாரிசான் பேரங்காடி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர் என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோஃப் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த நால்வர் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.14 மணியளவில் அந்த பேரங்காடி மையத்தில் இரண்டே நிமிடத்தில் இந்த கொள்ளை நிகழ்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்..

மூவர் கொள்ளையில் ஈடுபட்டிருக்க, ஒருவன், பேரங்காடிக்கு வெளியே காரில் காத்திருந்த நிலையில் நால்வரும் மின்னல் வேகத்தில் தப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்