கோலகுபுபாரு தொகுதியில் பெர்சத்து போட்டியிடுகிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து கட்சி போட்டியிடுகிறது. இந்த இடைத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சியான கெராக்கான் போட்டியிடாது என்று அக்கூட்டணிக்கு மிக நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் அசரீ சௌத் என்பவர் களம் இறக்கப்படுவதாக கோடிகாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கெராக்கான் போட்டியிட்ட நிலையில் இந்த இடைத் தேர்தலில் கெராக்கான் போட்டியிடும் என்று அதன் தேசியத் தலைவர் டொமினிக் லாவ் அறிவித்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்