சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞன் மீது குற்றச்சாட்டு

தம்பின், ஏப்ரல் 05-

தனது உடன் பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பதின்ம வயதுடைய இளைஞன் மீது தம்பின், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.

நீதிபதி கார்த்தினி கஸ்ரன் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 17 வயதுடைய இளைஞன் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் Gemas -சில் உள்ள ஒரு வீட்டில் 14 வயதுடைய சகோதரியிடம் இக்குற்றத்தை புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 30 ஆண்டு வரையில் சிறைத்தண்டனையும் அதிகபட்சம் 10 பிரம்படியும் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 (3) பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்படுவார் என்று தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்