‘சக்கர காரை’ பெற்று கொள்ள முடிவெடுத்த புரோடுவா

புரோடுவா பெசா காரை வாங்கி 8 மணி நேரத்திற்குள் பழுதடைந்ததாக நாகக்கன்னி சுப்ரமணியம் அளித்த புகாரை தொடர்ந்து புரோடுவா நிறுவனம் மொத்த தொகையுடன் அக்காரை பெற்று கொள்ள முடிவெடுத்துள்ளது.

பல சவால்களுக்கு பிறகு புரோடுவா நிறுவனம் திரும்ப காரை வாங்கி கொள்ள எடுத்திருக்கும் இந்த முடிவு தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக 31 வயதுடைய நாகக்கன்னி முகநூல் அகப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இனி மாதந்தோறும் புரோடுவா பெசாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் காரை வாங்கும் போது செலுத்திய முன்பணம் திரும்பவும் கிடைக்க பெறும் என நாகக்கன்னி தெரிவித்தார்.

இன்னொரு காரை அதே விலையில் வாங்கி கொள்வதற்கு புரோடுவா நிறுவனம் சலுகை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து 7 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படுவதோடு இவ்வேளையில் புரோடுவா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நாகக்கன்னி கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்