சட்டவிரோத சூதாட்டத்தில் எழுவர் கைது !

கூலிம் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற Ops Dadu சோதனையின்போது, சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுப்பட்ட எழுவர் கைது செய்யப்பட்டிருப்பத்தாக கெடா மாநில காவல்துறை தலைவர் டத்தோ பிசோல் பின் சாலே தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, இரவு 8.00 மணி அளவில் கூலிம், சுங்கை கோப்பிலுள்ள தாமான் முத்தியாராவில் 21 வயது முதல் 62 வயதுடைய 5 ஆடவர்களை காவல் துறை கைது செய்திருப்பதோடு  சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து கைத்தொலைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் .

அதே நாளில் சுங்கை கோப் வட்டாரத்திலுள்ள கடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில், உள்நாட்டைச் சேர்ந்த 19 மற்றும் 38 வயதுடைய இரு ஆடவர்களை சட்டவிரோத லாட்டரி  சூதாட்டத்தில் ஈடுப்பட்டதற்காக கைது செய்யபட்டனர் எனவும் பிசோல் தகவல் அளித்தார். அவர்களிடமிருந்து ரொக்கமும் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சில பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியத்தாக அவர் தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் சூதாட்ட அமையச் சட்டம் 1953இன் படி விசாரணை நடத்தப்படும் என்றார் டத்தோ பிசோல்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்