காரில் கருகி கிடந்த ஆடவரின் சடலம்

 

தாப்பா, ஜாலான் பகாங்கில். கார் ஒன்றில் இருந்து ஆடவரின் சடலம் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.

நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட கார் 50 சதவிகிதம் அழிந்ததாக பேரா மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் துணை இயக்குநர் சபரோட்ஸி னோர் அஹ்மாட் குறிப்பிட்டார்.

பூர்வக் குடிமக்களைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், காரின் பின் இருக்கையில் அமர்ந்தபடி இருந்ததாக சபரோட்ஸி தெரிவித்தார்.

தீயணைப்புப் படைக்கு அழைப்பு விடுக்கும் முன்னரே, அந்தக் காரில் ஏற்பட்டத் தீயை சுற்றி இருந்த பொதுமக்கள் அணைந்த்து விட்டதாகவும் , அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, அந்தச் சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சபரோட்ஸி கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்