சாலை ஓரக் கடையை மோதிய கார்

பினாங்கு புக்கிட் மெர்த்தாஜாம், குபாங் செமாங், ஜாலான் சுங்கை செமாம்புவில் உள்ள சாலையோரக் கடைக்குள் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி நுழைந்ததில் ஆடவர் ஒருவர் பலத்தக் காயத்திற்கு இலக்கானார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 30 வயது யாப் சுன் ஹுவாட் ஓடி வந்த கார் விபத்துக் குள்ளானதில் அவர் காரில் இருந்து வெளி வர முடியாமல் சிக்கிக் கொண்டார் என பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தகவல் அளித்தார்.

விபத்து நேரும்போது, அந்த சாலையோரக் கடையில் யாரும் இல்லை எனக் கூறியதோடு காரில் சிக்கிய யாப் சுன் ஹுவாட்ஐ செபராங் ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்