சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்

கிளந்தான், ஏப்ரல் 16-

கிளந்தான், கேத்தேரேஹ்-கோத்தா பாரு நெடுஞ்சாலையின் 9.9 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பதின்ம வயது இளைஞர்கள் உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் கேத்தேரேஹ்-விலிருந்து கோத்தா பாருவிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 முதல் 21 வயதிற்கு உட்பட்ட அந்த இளைஞர்கள் கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் மோஹட் ரோசுடி டவுட் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை தவிர்க்க முற்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மோஹட் ரோசுடி கூறினார்.

விபத்தில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் அம்மூவரும் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, மேல் நடவடிக்கைகளுக்காக அவர்களின் உடல் யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மோஹட் ரோசுடி இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்