சிறப்புப்பணிக்குழு ஓர் ஆலோசனை மன்றம் போல செயல்படும்

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா, ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் மாற்றப்பட்டப் பின்னர் அதன் சிறப்புப்பணிக்குழு, மித்ரா தொடர்பாக ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு ஓர் ஆலோசனை மன்றத்தைப் போல் செயல்படும். இதில் ஒற்றுமைத்துறை அமைச்சு மிகத் தெளிவாக இருப்பதாக அதன் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி விளக்கினார்.

மித்ராவின் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது, சமூகத்தின் எதிர்பார்ப்பு என்ன? இன்னும் எந்தெந்த வழிகளில் சமூகத்திற்கு உதவ முடியும் என்பதை மித்ரா நிர்வாகத்திற்கு இந்த சிறப்புப்பணிக்குழு ஆலோசனைகளை பரிந்துரைக்கும். இவ்விவரத்தை அந்த சிறப்புப்பணிக்குழுவின் தலைவர் P. பிரபாகரனிடம் அண்மையில் தாங்கள் தெளிவுபடுத்தியிருப்பதாக சரஸ்வதி கந்தசாமி குறிப்பிட்டார்.

மித்ரா சிறப்புப்பணிக்குழுவின் பணித்தன்மை மற்றும் அதன் செயலாக்கம் எவ்வாறு அமைந்திட வேண்டும், அதன் கடமைகள் யாவை என்பது தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய விதிமுறைகள் குறித்து ஒற்றுமைத்துறை அமைச்சின் கொள்கைப் பிரிவு தற்போது வரைந்து வருவதையும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்