சிறப்பு ஊக்கத் தொகையை கோருகிறது கியூபெக்ஸ்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 –

அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக கடந்த மாதம் தலா 2 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயாவிற்கு மற்றொரு உதவித் தொகையாக அரசு பணியாளர்களுக்கு தலா 500 வெள்ளியும், ஓய்வுப்பெற்ற ஊழியர்களுக்கு தலா 250 வெள்ளியும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கியூபெக்ஸ் கோரியுள்ளது.

பொதுச் சேவை ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டி, ஒவ்வொரு ஹரிராயா பொருநாளுக்கும் உதவித் தொகை வழங்குவதை அரசாங்கம் ஒரு பாரம்பரியமாக கொண்டுள்ளதால் அடுத்த மாதம் இத்தகைய ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அரசு பணியாளர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸின் தலைவர் Datuk Adnan Mat கோரிக்கை விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்