வரும் சட்டமன்றத் தேர்தல்களில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை கைப்பற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேவேளையில் பினாங்கு மாநிலத்தில் பல தொகுதிகளை கைப்பற்றம் சாத்தியம் இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்தார்.
தற்போது கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்கள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் கைவசம் உள்ள வேளையில் சிலாங்கூரையும், நெகிரி செம்பிலானையும் கைப்பற்றும் வகையில் இன்று தொடங்கி வரும் ஜுன் 28 ஆம் தேதி வரை “அதிரடி நடவடிக்கைக்கு 100 தினம்” எனும் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதாக சனூசி முகமட் நூர் குறிப்பிட்டார்.