சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி காயம்

செத்தியூ மாவட்டத்தில் உள்ள ஓர் அரசாங்க உதவி பெற்ற சமயப் பள்ளியில் மூன்றாம் படிவ மாணவி சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நேற்று பள்ளியின் தங்கும் விடுதியில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென இடிந்து விழுந்த கொங்கிரிட் சுவரில் சம்பந்தப்பட்ட மாணவியின் இரு கால்களும் காயமடைந்ததாகவும் பின் சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் திரெங்கானு மாநில கல்வித் துறையின் இயக்குநர் ஜெலானி சுலோங் தெரிவித்தார்.

பள்ளி உள்கட்டமைப்பு சீராகவும் பாதுகாப்பான நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதற்கு கடந்த ஆண்டு பராமரிக்க 200,000 வெள்ளியை கல்வி அமைச்சகம் வழங்கபட்டிருப்பதாக ஜெலானி சுலோங் கூறினார்.

இத்தகைய சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்றும் கல்வி அமைச்சகம் வழங்கிய நிதியுதவியை அப்பள்ளி நிர்வாகம் என்ன செய்தது என்ற கேள்வியினை அவர் எழுப்பினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்