செலாயாங்கில் மூன்று கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

போலீசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் கிரிமினல்கள் என்று நம்பப்படும் மூன்று அந்நியபிரஜைகளை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலையில் செலாயாங்கில் நிகழ்ந்தது.

இதில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அரிபின் முகமட் நசீர் உறுதிபடுத்தினார்.

இந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்