ஜொகூரில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

ஜொகூர் பாரு, ஏப்ரல் 12-

ஜொகூரில் மெர்சிங், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு உள்ளிட்ட 3 மாவட்டங்களில், பலத்த காற்றும் இடியுடன் கூடிய கனமழை பொழியுமென மலேசிய வானிலை ஆய்வு துறை – MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் கூடுதலாக அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்த கனமழை 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்காது என MET MALAYSIA இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இவ்வேளையில், இன்று காலை மணி 8 வரைக்குமான நிலவரத்தின்படி, கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு IPU மிதமான அளவில் பதிவாகியுள்ளது. கிள்ளானில் 72, பன்த்திங்கில் 87, செராஸ்-சில் 81 என பதிவாகியுள்ளதாக, MET MALAYSIA அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்