ஒஉத்ராஜெயா, ஜன – 4,
கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி ரவாங், மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் நிலையத்தின் மீது பாரந் தூக்கியான டவர் கிரேன் ஒற்று விழுந்தது தொடர்பில் அதன் குத்தகையாளருக்கு போக்குவரத்து அமைச்சு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அதன் அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது கடுமையான குற்றமாகும். தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். ரயில் இருப்புப்பாதை மீது டவர் கிரேன் விழும் சம்பவம் இது முதல் முறையல்ல என்பதால் சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தோணி லோக் பரிந்துரைத்துள்ளார்.