ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் அடை மழை

ஜோகூர் பாரு, ஜன – 4,

ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் அடை மழை பெய்ததில் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி வரை பெய்த கனத்த மழையில் குளுவாங், மெர்சிங், ஜோகூர் பாரு, கோத்தா திங்கி ஆகிய நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாகக்குழுத் தலைவர் அஸ்மி ரோஹனி தெரிவித்துள்ளார்

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளதாக அஸ்மி ரோஹனி குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்