முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தண்டனைக் காலத்தை மன்னிப்பு வாரியம் குறைத்திருக்கும் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று மூடா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
நஜீப்பின் சிறைத் தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதற்கான நடவடிக்கை குறித்து டத்தோஸ்ரீ அன்வார் விளக்க வேண்டும் என்று மூடா வலியுறுத்தியுள்ளது.