தப்பியோடிய 51 கைதிகள் பிடிக்கப்பட்டு விட்டனர்

பேரா, Bidor குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்ற 130 சட்டவிரோதக் குடியேறிகளில் இன்று மாலை 5.00 மணி வரையில் 51 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளனர். எஞ்சியவர்களை பிடிப்பதற்கு தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று பேரா மாநில போலீஸ் தலைவர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்துள்ளார்.

ஆகக்கடைசியாக இன்று மாலையில் மேலும் 10 பேர் பிடிப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் Bidor, Kampung Senta அருகில் பிடிபட்டனர். அனைவரும் செம்பனைத் தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்தனர் என்று அவர் விளக்கினார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் அந்த தடுப்பு முகாமில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தப்பியோடிய 131 பேரில் ஒருவர் வாகனத்தில் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்ட நிலையில் எஞ்சியவர்களை பிடிப்பதற்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட வருவதாக Mohd Yusri Hassan குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்