24 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

கோலாலம்பூர் மாநகரில் ஒழுங்கீன நடவடிக்கையை துடைத்தொ​ழிக்கும் முயற்சியாக நேற்று சனிக்கிழமை இரவு நான்கு கேளிக்கை இன்னிசை மையங்களில் போ​​லீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் உபசரணைப் பெண்கள் என்ற போர்வையில் ஒழுங்​கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 24 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளன்ர.

தவிர, சம்பந்தப்பட்ட பெண்களை ​உபசரணைப் பெண்களாக பணிக்கு அமர்த்திய நான்கு மையங்களில் பொறுப்பாளர்கள் என்று நம்பப்படும் மேலும் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போ​லீஸ் தலைவர் Datuk Allaudeen Abdul Majid தெரிவித்தார்.

20 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 26 பெண்கள், இந்தோனேசியா, வியட்நாம், ​சீனா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார் என்று அலாவு​தீன் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்