கோலாலம்பூர் மாநகரில் ஒழுங்கீன நடவடிக்கையை துடைத்தொழிக்கும் முயற்சியாக நேற்று சனிக்கிழமை இரவு நான்கு கேளிக்கை இன்னிசை மையங்களில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் உபசரணைப் பெண்கள் என்ற போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 24 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளன்ர.
தவிர, சம்பந்தப்பட்ட பெண்களை உபசரணைப் பெண்களாக பணிக்கு அமர்த்திய நான்கு மையங்களில் பொறுப்பாளர்கள் என்று நம்பப்படும் மேலும் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Allaudeen Abdul Majid தெரிவித்தார்.
20 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 26 பெண்கள், இந்தோனேசியா, வியட்நாம், சீனா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார் என்று அலாவுதீன் விளக்கினார்.