தவறுகள் செய்யும் யாருடனும் டிபிகேஎல் சமரசம் செய்து கொள்ளாது. அவர்களைக் காப்பாறும் முயற்சியிலும் அது இறங்காது என அம்மன்றம் தெரிவித்துள்ளது.
வியட்நாமிய பெண் ஒருவர் DBKL உடன் நல்ல உறவைக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வைரலான செய்தியைக் குறிப்பிடும் வகையில் DBKL இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகத்தில் பரவி வரும் அந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தற்போதுள்ள சட்டத்தில் உள்ள அமலாக்க நடவடிக்கைகளில் இருந்து எந்தத் தரப்பும் விதிவிலக்கு இல்லை என்றும் DBKL வலியுறுத்தியது.