செம்பனை ஏற்றி வந்த டிரேய்லர் கவிழ்ந்தது

நெகிரி செம்பிலான் போர்ட் டிக்சன் அருகே உ;;அ லுகுட்-செப்பாங் சாலை சந்திப்பில் செம்பனையை ஏற்றி வந்த டிரெய்லர் கவிழ்ந்தது. இதனால், சாலை முழுவதும் செம்பனைப் பழங்கள் சிதறின. மேலும் 3 வாகனங்களும் விபத்துக்குள்ளாகின,

இது குறித்து தகவல் வெளியிட்ட போர்ட் டிக்சன் போலீஸ் தலைவர் Superintenden Aidi Sham Mohamed தெரிவிக்கயில், சிப்பாங்கில் இருந்து சிரம்பானை நோக்கி அந்த டிரெய்லர் காலை 8.40 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்