செமஞ்சே, புக்கிட் ப்ரோகா -வில் 0.8 ஹெக்டேர் பரப்பளவில் காட்டில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து நேற்று இரவு 7:39 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறை நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாக கூறப்படுகின்றது.
இதை தொடர்ந்து, செமஞ்சே தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு உட்பட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செமஞ்சே தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
தீ ஏற்பட்ட விபத்தை குறித்து காரணம் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று அஹ்மத் முக்லிஸ் ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.
முன்னதாக, இந்த தீ சம்பவத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவலாக வைரலாகியதுடன் மலையேறும் நடவடிக்கைகளுக்கு புக்கிட் ப்ரோகா காட்டுப்பகுதி பிரசித்து பெற்ற ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.