தீ விபத்து, 6 பேர் ஜன்னல் வழியாக குதித்தனர்

Menggatal, Kampung Muhibbah baru – வில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் எட்டு வயதுடைய சிறுமி உட்பட ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஜன்னல் வழியாக கீழே குதித்து தங்களை காப்பாற்றி கொண்டனர்.

நேற்று இரவு 9:50 மணியளவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது தீயினால் பக்கத்து வீடு பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து 3 மீட்டர் உயரத்திலிருந்து ஜன்னல் வழியாக குடும்பத்துடன் கீழே குதித்து உயிரை காப்பாற்றி கொண்டதாக 28 வயதுடைய Suliani Aidi தெரிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து இரவு 9:57 மணியளாவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்புபடையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக சபா, தீயணைப்பு, மீட்புபடை தலைமை இயக்குநர் Kiniremmy Zikol@Lupi குறிப்பிட்டார்.

இவ்விபத்தில் நான்கு வீடுகள் தீயில் பாதிப்படைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், தீ நிகழ்ந்த சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Kiniremmy Zikol@Lupi விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்