துயர் துடைப்பு மையங்கள் கோவிட்-19 தொற்றுப் பரவல்

கிளாந்தான் ,திரங்கானு மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையங்களில் கோவிட்-19 நோய்ப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி 20 பேருக்கு அந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுல்கிஃபலி அகமாட் தெரிவித்தார்.

கிளாந்தானில் 15 பேருக்கும் திரங்கானுவில் 5 ஒஏருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை பாதிப்பில் 17 பேரும்
மூன்றாம் நிலை பாதிப்பில் 2 பேரும்
நான்காம் நிலை பாதிப்பில் ஒருவரும் பட்டியலிட்பட்டுள்ளனர்.

மற்றொரு நிலவரத்தில், 123 மனநல உதவிகளையும் சுகாதாரப் பணியாளர் வழங்கி வருவதாக அமைச்சர் சுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்