தூண்டிவிடும் போக்கை நிறுத்திக்கொள்வீர்

கோலாலம்பூர், மார்ச் 27-

அல்லாஹ் என்று சொல் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனை தொடர்பில் இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3R விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி, பிரச்னையை பூதகரமாக்குவதை அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினரும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று புக்கிட் அமான் இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எனவே இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்குவதை விடுத்து, அமைதி நிலைக்கு அனைத்து தரப்பினரும் திரும்ப வேண்டும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கய்ரி ஜமாலுட்டின் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு தாம் உடன்படுவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ மோஹட் ஷுஹைலி மோஹட் ஜெயின் தெரிவித்துள்ளார்.

3R விவகாரம் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இனம் சம்பந்தப்பட்ட எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது ஆளும் அரசாங்கத் தரப்பினராக இருந்தாலும் மற்ற தரப்பினராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இவ்விவகாரத்தை தொடர்வதை அனைத்து தரப்பினரும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மோஹட் ஷுஹைலி எச்சரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்