தேசிய சேவை 3.0 தொடங்குவதற்கு ஆயத்தம்

கோலாலம்பூர், பிப்ரவரி 29 –

இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை விதைக்கும் தேசிய சேவை 3.0 திட்டம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக அதன் பாடத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தற்காப்பு அமைச்சர் மொகமட் காலெட் னோர்டின் தெரிவித்துள்ளார்.

தேசிய சேவை 3.0 பாடத் திட்டம் முழுமைப்பெற்றதும் இளையோர்களுக்கான இத்திட்டம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சேவையில் சம்பந்தப்பட்டுள்ள அரசாங்க ஏஜென்சிகள் தற்போது முழு வீச்சில் அந்த பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்