கோலாலம்பூர், பிப்ரவ்ரி 29 –
நாட்டின் தேசிய நீச்சல் வீராங்கனைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தொடர்புப்படுத்தப்பட்ட பயிற்றுநர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை முடியும் வரையில் அவரை விடுப்பில் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹனா யோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட பாதுகாப்பான விளையாட்டு குறியீடு திட்டத்தின் வாயிலாக அந்த வீராங்கனையின் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு, இச்சம்பவம் தொடர்பான புகார் கிடைத்தவுடன் தேசிய விளையாட்டு மன்றத்தின் அதிகாரி, சம்பந்தப்பட்ட வீராங்களை சந்தித்து பேசியிருப்பதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பயிற்றுநர், இத்தகைய வக்கிர செயலில் ஈடுபட்டுதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.