SRC Internasional நிதி முறைகேட்டு வழக்கில் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் நேரடி விவாதத்தில் பங்கேற்பது என்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும் என்று Bukir Gelugor எம்.பி. ராம் கர்ப்பாரல் சிங் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப் குற்றவாளி என்று உயர் நீதிமன்றத்தில் இருந்து கூட்டரசு நீதிமன்றம் வரை உறுதி செய்தப் பின்னர் தமது தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்துக்கூறுவதற்கு தம்முடன் விவாதத்தில் கலந்து கொள்ளத் தயாரா? என்று சவால் விட்டு இருக்கும் நஜீப்,தனது வாதங்களை நீதிமன்றத்தில் கூறியிருக்க வேண்டுமே தவிர தம்முடன் அல்ல என்று முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சரான ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.