நஜீப்புடன் விவாதம் தேவையில்லாதது என்கிறார் ரா​ம் கர்ப்பால்

SRC Internasional நிதி முறைகேட்டு வழக்கில் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் நேரடி விவாதத்​தில் பங்கேற்பது என்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும் என்று Bukir Gelugor எம்.பி. ராம் கர்ப்பாரல் சிங் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப் குற்றவாளி என்று உயர் நீதிமன்றத்தில் இருந்து கூட்டரசு ​நீதிமன்றம் வரை உறு​தி செய்தப் பின்னர் தமது தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்துக்கூறுவதற்கு தம்முடன் விவாதத்தில் கலந்து கொள்ளத் தயாரா? என்று சவால் விட்டு இருக்கும் நஜீப்,தனது வாதங்களை ​நீதிமன்றத்தில் கூறியிருக்க வேண்டுமே தவிர தம்முடன் அல்ல என்று முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சரான ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்