சுமார் 2 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக Aman Palestin Berhad நிர்வாக இயக்குநருக்கு எதிராக ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் 52 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
Abdullah Zaik Abdul Rahman என்ற அந்த நிர்வாக இயக்குநர், Samudra Champa Sdn. Bhd. நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில் அமான் பாலஸ்தீனத்திற்கு சொந்தமான 5 லட்சம் வெள்ளியை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அந்த நிதியை Abdullah Zaik – நம்பிக்கை மோசடி செய்ததாக அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 52 குற்றச்சாட்டுகளில் அடங்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2018 க்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் சிலாங்கூர், Bandar Baru Bangi-யில் உள்ள MayBank வங்கியில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
Abdullah Zaik- க்கு எதிரான 52 குற்றச்சாட்டுகளும் அதன் மோசடித் தன்மைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. குற்றவியல் சட்டம் 409 பிரிவின் கீழ் குற்றஞ்சுாட்டப்பட்ட Abdullah Zaik-, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
வழக்கு விசாரணை அடுத்த மார்ச் மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவரை 10 லட்சம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.