செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான கொண்டு வரப்பட்டுள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் விண்ணப்பம் செய்துள்ளார்.
.இது தொடர்பான விண்ணப்பம் ஒன்றை சனூசி, நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் அவாங் அர்மாடாஜயா அவாங் தெரிவித்தார்.
சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக தேச நிந்தனை தன்மையில் கடந்த ஜுலை 11 ஆம் தேதி கோம்பாக், தாமான் செலாயாங் முத்தியாராவில் அரசியல் பேரணியில் உரையாற்றியது தொடர்பில் சனூசி தேச நிந்ததனை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.