மன உளைச்சலில் இருந்ததாக நம்பப்படும் லோரி ஓட்டுநர், எதிர்திசையை நோக்கி அந்த கனரக வாகனத்தை செலுத்தி போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்ன 15 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர், கூலாய்க்கு அருகில் நிகழ்ந்தது.
காலை 11.30 மணியளவில் அந்த நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனங்கள் வந்து கொண்டிருந்த போது அந்த நபர், ஸ்கூடாய் டோல் சாவடியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் லோரியை செலுத்திய நிலையில் அவர் போலீசாரால் வழிமறிக்கப்பட்டு பிடிக்கப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்தார்.