நியூசிலாந்தில் விபத்து, இரு மலேசியர்கள் பலி

ஷாஹ் அலாம், மார்ச் 30-

நியூசிலாந்து, லேக் தெக்கப்போ நகரில் சாலை விபத்தில் சிக்கிய ஐந்து மலேசிய மாணவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இத்தகவலை நியூசிலாந்து, வெலிங்டன்-னில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்து மலேசிய மாணவர்களில் இருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்ட வேளையில் கடுமையான காயங்களுக்கு ஆளான மேலும் மூவர் நியூசிலாந்து, சவுத் ஐலாந்து, க்ரிஸ்சர்ச் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்