ஷாஹ் அலாம், மார்ச் 30-
நியூசிலாந்து, லேக் தெக்கப்போ நகரில் சாலை விபத்தில் சிக்கிய ஐந்து மலேசிய மாணவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
இத்தகவலை நியூசிலாந்து, வெலிங்டன்-னில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
ஐந்து மலேசிய மாணவர்களில் இருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்ட வேளையில் கடுமையான காயங்களுக்கு ஆளான மேலும் மூவர் நியூசிலாந்து, சவுத் ஐலாந்து, க்ரிஸ்சர்ச் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.