நீரில் அடித்துசெல்லப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்

பெசுட், ஏப்ரல் 23-

தெரெங்கானு, பெசுட், ஜெர்டிஹ்-வில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயினுள் விழுந்த மோட்டார்சைக்கிளோட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

நேற்றிரவு மணி 8 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், உயிழந்தவர் பொருள் அனுப்புநரான 24 வயது வான் முஹம்மது குசாயிமி அபு செபியன் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, அவ்வாடவர் கம்போங் கெராய் துவா-விலுள்ள தமது வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த நிலையில், அவர் செலுத்திய யமஹா Ego LC ரக மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறத்திலுள்ள கால்வாயினுள் பாய்ந்தது.

கால்வாயினுள் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், விழுந்த பகுதியிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் நீரில் அடித்து செல்லப்பட்டதாக, பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்ட வேளை, சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பட்டதாகவும் அப்துல் ரோசாக் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்