நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிக்க தொடங்கியது

வரும் திங்கட்கிழமை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று காலை 9.30 மணி வரையில் சுங்கை பூலோ- விலிருந்து புக்கிட் பெருந்தோங் – கிற்கு செல்லும் வழியில் வாகன ஓட்டுநர்கள் மெதுவாக சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

புக்கிட் தகார் -ரிலிருந்து புக்கிட் பெருந்தோங்- கிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதியில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜாசினிலிருந்து அயேர் கெரோ-விற்கு செல்லும் வழியிலும் விபத்து நிகழ்ந்துள்ளதால் நான்கு கிலோமீட்டர் வரை சாலை நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் நெடுஞ்சாலைகளில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வலியுறுத்தப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்