நோன்புப்பெருநாள் மகிழ்ச்சியில் திடீர் அதிர்ச்சி

சிக், ஏப்ரல் 11 –

நோன்புப்பெருநாள் மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஒரு குடும்பத்தினருக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு, அனைவரும் சிறிது நேரம் பதற்றத்தில் நிலைக்குத்திய சம்பவம் நேற்று கெடா, சிக், கம்பூங் கோத்தா ஆவுரில் நிகழ்ந்தது.

வீட்டின் பிரதான குளிரூட்டிப் பகுதிக்குள் பாம்பு சட்டை இருப்பதை கண்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சியில் உறைந்ததுடன், இதர குடும்ப உறுப்பினர்களும் அதனைப் பார்த்து பயந்து வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். .

பின்னர் இது குறித்து தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்., அந்த வீட்டிற்கு விரைந்த எழுவர் அடங்கிய வீரர்கள், குளிரூட்டியின் முகப்பை பை திறந்து சோதனை செய்த போது அது கருநாகத்தின் சட்டை என்பதை உறுதி செய்தனர்.

எனினும் அந்த குளிரூட்டிக்குள் பாம்பு இல்லாததைக் கண்ட அவர்கள், சுமார் 15 நிமிடம் வீட்டை நன்கு சோதனை செய்தப்பின்னர் பாம்பு இல்லை என்பதை உறுதி செய்தனர் என்று சிக் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தான்ஜில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்