தம்ரின் கபார் பாபா விசாரணைக்கு அழைக்கப்படுவார்

கோலாலம்பூர், ஏப்ரல் 11 –

அடுத்த பத்து ஆண்டுகளில் மலாய்க்காரர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஆருடம் கூறியிருக்கும் முன்னாள் துணைப்பிரதமர் துன் அப்துல் காஃபர் பாபாவின் புதல்வர் டத்துக் மொஹாமாட் தாம்ரின் , போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

தம்ரினிடம் அடுத்த வாரத்தில் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்வர் என்று ஐஜிபி குறிப்பிட்டார். எனினும் அடுத்த வாரம், எந்த தினத்தில் இந்த வாக்குமூலப்பதிவு நடைபெறும் என்பதை தான் ஶ்ரீ ராசாருடின் விவரிக்கவில்லை.

போலீசாரின் விசாரணைக்கு தம்ரின் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐஜிபி கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்