பகடிவதை சம்பவங்களை கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது

ஷாஹ் அலாம், மார்ச் 23.

தனது மேற்பார்வையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி வளாகங்களில் மாணவர் சம்பந்தப்பட்டக்கூடிய எந்தவொரு பகடிவதை சம்பவத்தையும் கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது என்று இன்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.

சபாவில், தொழில்நுட்பக்கல்லூரி ஒன்றில் தனது சக நண்பர்களால் 17 வயது மாணவ​ன் நட்ஜ்மி ஐசாட் மொஹ்ட் நாருள் அஸ்வான் தாக்கப்பட்டு, மரண விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இச்சம்பவம் இன்னமும் போ​லீஸ் விசாரணையில் இருந்த போதிலும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்