பக்காத்தான் எந்தவொரு அறிக்கையும் வெளியிடக்கூடாது

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தண்டனை காலம் குறைப்பு தொடர்பாக மன்னிப்பு வாரியம் எடுத்துள்ள முடிவு குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று பக்காத்தான் ஹராப்பானை மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் வாயைத் திறக்காமல் இருப்பதுதான் நல்லது என்று பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவருமான அம்பிகா அறிவுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் குரல் கொடுக்குமானால், பாதுகாக்க முடியாத விஷயங்களை , பாதுகாப்பதில் அது தலையிடுவதாக அமைந்து விடும் என்று அம்பினா ஆலோசனைக் கூறினார்.

இவ்விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் இனியும் அறிக்கை வெளியிடமால் இருப்பதே மேலானது என்று தனது முகநூலில் அம்பிகா அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்